மெதுவாக நடந்து வந்ததால் பரபரப்பு: ஐஸ்வர்யாராய் கர்ப்பமா?

Read Time:2 Minute, 27 Second

20ish.jpgமுன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யாராய் நடிகர் அபிஷேக்பச்சனை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். வரும் ஏப்ரல் மாதத்துடன் ஓராண்டு நிறைவு அடைகிறது. திருமணத்துக்குப் பிறகும் ஐஸ்வர்யாராய் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார். அவர் எப்போதும் போல் இளமையுடன் இருக்கிறார். இதற்கிடையே டெல்லியில் நடந்த வைரநகை கண்காட்சிக்கு நடிகை ஐஸ்வர்யாராய் வந்திருந்தார். எப்போதும் சுறுசுறுப்புடன் நடந்து செல்லும் ஐஸ்வர்யா இந்த கண்காட்சியின் போது அவர் மெதுவாக நிதானமாக அடி எடுத்து வைத்து நடந்து சென்றார். இது அங்கு இருந்த பார்வையாளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. “என்னாச்சு ஐஸ்வர்யாவுக்கு கர்ப்பமாக இருக்கிறாரா? அதனால்தான், பார்த்து பார்த்து நடக்கிறாரா?” என ஒவருக்கொருவர் பரபரப்பாக பேசிக்கொண்டனர். இது பற்றி ஐஸ்வர்யாவிடம் கேட்டபோது சிரித்துக்கொண்டே, நான் எப்போதுமே கவனமாக நடப்பேன். துப்பட்டா ஒரு பக்கம் சரியாமல் இருக்க பார்த்து பார்த்துதான் நடப்பேன் அதைவைத்து கற்பனை செய்து கொண்டால் எப்படி? என்று மழுப்பலாவாக கூறினார். அவர் மேலும் கூறுகையில், இப்போது எனது வாழ்க்கையில் புதிய அத்தியாயம் தொடங்கி இருக்கிறது. அபிஷேக்கின் மனைவியாக இருப்பது கூடுதல் சிறப்பு. எனக்கு அமிதாப்பும், ஜெயாஜியும் மேலும் ஒரு பெற்றோர்களாக கிடைத்து இருக்கிறார்கள்” என்றார். திருமணமாகி குழந்தை பெற்ற பின்பு நடிகை மாதுரி தீட்சித் இந்திப்படங்களில் நடித்து வருகிறார். அவரது வருகையால் உங்களுக்கு பாதிப்பா? என்று கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கிருஷ்ணா நதியில் 3 1/2 கி.மீ. தூரம் நீந்தி சிறுமி சாதனை
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்… “COSMO” “COSMO” “COSMO”