முல்லைத்தீவு:கத்திக் குத்து சம்பவம்;மூவர் படுகாயம்..!!
Read Time:1 Minute, 18 Second
முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பகுதியில் நேற்று இரவு இனம்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த மூவர் வியாபாரிகள் என்பதுடன் இதன் காரணத்தை கண்டித்து ஒட்டிசுட்டான் வர்த்தக சங்கம் கதவடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு ஒட்டிசுட்டான் வர்த்தகநிலையத்தில் இனந்தெரியாத நபர் ஒருவருக்கும் வியாபாரி ஒருவருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதால் குறித்த சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த வியாபாரிகள் முல்லைத்தீவு அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு,குறித்த சம்பவம் தொடர்பாக ஒட்டிசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Average Rating