வெவ்வேறு ஆண்கள் மூலம் வியட்நாம் பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்…!!
வியட்நகரில் உள்ள ஹனோய் நகரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அக்குழந்தைகளுக்கு தற்போது 2 வயதாகிறது. இரட்டையர்களாக இருந்தாலும் இருவரின் உடல் மற்றும் முக அமைப்புகள் வித்தியாசமாக உள்ளன.
ஒரு குழந்தைக்கு அடர்த்தியாக தலைமுடி உள்ளது. மற்றொரு குழந்தைக்கு லேசான தலைமுடி உள்ளது. இதனால் அக்குழந்தைகளின் தந்தைக்கு சந்தேகம் ஏற்பட்டது. பிரசவத்தின் போது குழந்தை மாற்றப்பட்டு விட்டதாக சந்தேகம் அடைந்தார்.
எனவே, குழந்தைகள் தங்களுடையது தானா? என்பதை அறிய டி.என்.ஏ. பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தார். சோதனை முடிவில் இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டும் அவருக்கு பிறந்தது என தெரியவந்தது. மற்றொரு குழந்தை வேறு ஒரு ஆணுக்கு பிறந்தது உறுதி செய்யப்பட்டது.
அதாவது இரட்டை குழந்தைகளின் தாயார் தனது கணவருடனும், மற்றொரு நபருடனும் செக்ஸ் உறவு வைத்துள்ளார். இவர்கள் இருவரின் உயிரணுக்களும் அவர்கள் கர்ப்பம் தரிக்கும் காலத்தில் அப்பெண்ணின் 2 வேறு கருமுட்டைகளுடன் கலந்து குழந்தைகளாக உருவாகியுள்ளன.
பிரசவத்தின் போது இக்குழந்தைகள் சில மணி நேர இடைவெளியில் பிறந்துள்ளன. இச்சம்பவம் உலகில் மிக அதிசயமாக நடைபெறக் கூடியது என மருத்துவ நிபுணர்கள் அதிசயிக்கின்றனர்.
Average Rating