தண்டவாளத்தில் படுத்திருந்த இளைஞனின் கை துண்டிப்பு..!!

Read Time:1 Minute, 45 Second

downloadரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் தனது வலது கையை முழங்கையுடன் இழந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாiயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண் நாவலர் வீதி ஐந்து சந்திப்பகுதியைச் சேர்ந்த யசுரூதீன் சயின் மொஹமட் (வயது 19) என்ற இளைஞரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறையில் நோக்கி இன்று வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் புகையிரதம் பயணித்துக் கொண்டிருந்துள்ளது.

புகையிரதம் யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் வந்துகொண்டிருக்கும் போது, குறித்த பகுதியில் உள்ள ரயில் கடவையில் குறித்த இளைஞர் படுத்திருந்துள்ளார்.

புகையிரதம் அண்மித்துக்கொண்டிருந்த போது, இளைஞர் படுத்திருந்ததை கண்ட பொதுமக்கள் இளைஞரை அப்புறப்படுத்துவதற்கு முற்பட்ட போது, இளைஞரின் கை புகையிரதத்திற்குள் சிக்குண்டுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளிநொச்சியில் உலக சிறுநீரக தினம்..!!
Next post வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள்…!!