எரிந்த சடலங்கள் மீட்கப்பட்ட விடயம் சிஐடியிடம் ஒப்படைப்பு..!!
Read Time:1 Minute, 9 Second
தங்கொட்டுவ, புத்கம்பொல பிரதேசத்தில் எரியூட்டப்பட்டிருந்த வேன் ஒன்றில் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 119 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தங்கொட்டுவ பொலிஸ் அதிகாரிகளினால் எரியூட்டப்பட்ட வேனில் இருந்து எரிந்த நிலையில் காணப்பட்ட சில சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட சடலங்கள் மிகவும் கருகிய நிலையில் இருப்பதால் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் சுமார் ஐந்து சடலங்கள் அதில் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating