பெண் உதவியாளருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த இந்திய வம்சாவளி பேராசிரியர்…!!

Read Time:1 Minute, 41 Second

c394caff-0af8-4909-bbe9-78ef65f809f0_S_secvpfஅமெரிக்காவில் உள்ள பெர்க்லி சட்டக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் சுஜித் சவுத்ரி (வயது 45). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். சுஜித் சவுத்ரியிடம் உதவியாளராக தியான் சோரல் என்ற பெண் பணியாற்றி வந்தார். அவருக்கு சுஜித் சவுத்ரி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கடந்த 2014–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை பலமுறை அவர் செக்ஸ் தொல்லை கொடுத்ததாக தியான் தற்போது புகார் கூறி உள்ளார். இது தொடர்பாக பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரித்து வருகிறது. இதையடுத்து காலவரையற்ற விடுப்பில் சென்ற சுஜித் சவுத்ரி தலைமறைவாகி விட்டார்.

இதற்கிடையே விசாரணைக்குப் பிறகு சுஜித்தின் சம்பளம் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு தனது சொந்த செலவில் வந்து ஒத்துழைப்பு கொடுப்பதுடன் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று பல்கலைக்கழக தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். அதேசமயம் புகார் கூறியுள்ள சோரலுக்கு முழு சம்பளத்துடன் கூடிய நிர்வாக விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொட்டகலையில் வாகன விபத்து;ஒருவர் படுகாயம்…!!
Next post அமெரிக்காவில் மனைவி உள்ளிட்ட 5 பேரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்…!!