பாகிஸ்தானில் 14 தலீபான் தீவிரவாதிகள் கைது…!!
Read Time:1 Minute, 7 Second
பாகிஸ்தானில் குயெட்டா நகரின் பாஷ்டூனாபாத் பகுதியில் ஏராளமான ஆப்கானிஸ்தான் அகதிகள் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
அங்கு ஒரு வளாகத்தில் ஆப்கானிஸ்தான் தலீபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கு விரைந்து சென்று, அந்த வளாகத்தை சுற்றி வளைத்தனர். அங்கிருந்த 14 தலீபான் தீவிரவாதிகளை அவர்கள் கைது செய்தனர்.
அவர்களை ஒரு ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். கடந்த காலத்திலும் கூட இதே பகுதியில் இருந்து ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating