கொட்டகலையில் வாகன விபத்து;ஒருவர் படுகாயம்…!!

Read Time:1 Minute, 50 Second

f1b4c8cd-2ec3-43d7-b96e-9670d531f635திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை புதிய சுரங்கப்பாதைக்கும் கொட்டகலை பால் சேகரிப்பு நிலையத்திற்கும் இடையில் பிரதான வீதியில் 11.03.2016 அன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுங்காயம்பட்டு கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கொழும்பிலிருந்து நுவரெலியா பகுதிக்கு 11.03.2016 அன்று காலை மாணவர்களை ஏற்றி சுற்றுலா பிரயாணம் மேற்கொண்ட பஸ் ஒன்று மீண்டும் 11.03.2016 அன்று மாலை கொழும்புக்கு திரும்புகையில் குறித்த இடத்தில் பின்னோக்கி வந்த மோட்டர் சைக்கிளில் பயணித்த நபர் மேற்படி பஸ்ஸை முந்தி செல்ல முற்பட்ட போது இந்த விபத்து சம்பவித்துள்ளது.

பஸ்ஸிற்கு அடி புறத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியுடன் வலிக்கி சென்றதன் காரணமாக சாரதி படுங்காயங்கள் அடைந்துள்ளார். இந்த நிலையில் இவரை அருகில் உள்ள கொட்டகலை வைத்தியசாலையில் உடனடியாக சேர்கப்பட்டட அதேவேளை ஸ்தலத்திற்கு விரைந்த திம்புள்ள – பத்தனை பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பு மாணவியின் புதிய கண்டுபிடிப்பு…!!
Next post பெண் உதவியாளருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த இந்திய வம்சாவளி பேராசிரியர்…!!