காலியில் பொலிஸாரும் இளைஞர்களும் மோதல்…!!

Read Time:1 Minute, 37 Second

1543721113Galleகாலி, தடல்ல பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பிரதேச இளைஞர்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

திருமண நிகழ்வொன்றில் மோதல் நிலை ஏற்பட்டிருப்பதாக கூறி இன்று அதிகாலை 3.00 மணியளவில் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைப்பொன்று கிடைக்கப் பெற்றுள்ளது.

அதன்படி காலி பொலிஸ் நிலையத்தின் நான்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இதன்போது பொலிஸாருக்கும் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் குழுவொன்றுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் காலி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவரின் தலைப் பகுதி தடி ஒன்றினால் தாக்கப்பட்டு காராப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் மோதல் சம்பவத்தில் பொலிஸ் ஜீப் வண்டியின் கண்ணாடிகளும் உடைந்துள்ளாதாக எமது செய்தியாளர் கூறினார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதுடன், காலி நீதிமன்றில் அவர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குருநாகல்:விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!!
Next post இன்று முதல் கோதுமை மா விலை அதிகரிப்பு…!!