கண், காது, மூக்கில் இருந்து இடைவிடாமல் ரத்தம் வழியும் நோய்க்கு மருத்துவம் தேடும் இளம்பெண்…!!

Read Time:2 Minute, 40 Second

adb6e166-3117-449d-b3ac-ae21ce60104e_S_secvpfஇங்கிலாந்தின் ஸ்டோக் ஆன் டிரெண்ட் நகரை சேர்ந்தவர் மெர்னி ரே ஹார்வே(17). தனக்கு 14 வயது ஆகும் வரை மற்றப் பெண்களைப்போலவே மெரினியும் வாழ்ந்து வந்தார். ஆனால், கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து இவரது வாழ்வில் அடுத்தடுத்து ஏற்பட்ட சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

ஒருநாள் படுக்கையில் இருந்த எழுந்தபோது, அவரது தலையணையில் ரத்தம் வழிந்துள்ளதை பார்த்து வியப்படைந்த மெர்னி, கண்ணாடியில் தனது முகத்தை பார்த்துள்ளார்.

அப்போது, அவரது மூக்கில் இருந்தும் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து உடனடியாக தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். மகளின் முகத்தை கண்டு கண்ணீர் வடித்த தாயார் அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் அவருக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டது. ஆனால், அவரது உடலில் எந்தவித நோயும் இல்லை என தெரிய வந்தது. ஆனால் ரத்தம் வடிவது மட்டும் நிற்கவில்லை.

கடந்த மூன்றாண்டுகளாக இதுபோல் அவ்வப்போது ரத்தம் வெளியேறிக் கொண்டுதான் இருக்கிறது. பின்னர், ஒருநாள் திடீரென அவரது கண்ணில் இருந்தும் ரத்தம் வடிய தொடங்கியுள்ளது. கண்ணைத் தொடர்ந்து காது, நாக்கு, விரல் நகங்களிலிருந்தும், உச்சந்தலையில் இருந்தும் ரத்தம் வழிந்ததை கண்டு அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதற்காக, பல்வேறு மருத்துவனைகளில் பரிசோதனை செய்தும் இதற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. ஒரு நாளில் 5 முறை இவ்வாறு ரத்தம் வழிவதால், நண்பர்களுடன் வெளியே செல்வதைகூட நிறுத்தி விட்டு தற்போது வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கிறார். தனது பரிதாப நிலையைப்பற்றி சமூக வலைத்தளங்களில் பரிமாறிவரும் மெர்னி ரே ஹார்வே, இந்த நோய்க்கான தீர்வை தேடி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இது உண்மையாக இருக்குமா?… இவங்கள அடிச்சிக்க ஆளே இல்லைப்பா…!!
Next post நீண்டநேரமாக அலைபேசியில் உரையாடிய இளைஞர் மரணம்..!!