தீயிலிருந்து காப்பாற்ற 2–வது மாடியில் இருந்து குழந்தையை ஜன்னல் வழியாக வீசிய தாய்…!!

Read Time:1 Minute, 36 Second

6c70b6a1-cbbf-43d6-b809-d531833023b5_S_secvpfஆஸ்திரேலியா நாட்டில் உள்ள லகேம்பா என்ற இடத்தை சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2–வது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

2 நாட்களுக்கு முன்பு அந்த பெண் குழந்தை பெற்றார்.

பிறந்த குழந்தை மற்றும் ஏற்கனவே உள்ள 2 வயது குழந்தை ஆகியோருடன் வீட்டில் அவர் இருந்தார். அப்போது வீட்டில் திடீரென தீ பிடித்தது. 3 பேரும் சிக்கிக் கொண்டனர்.

அதில் இருந்த 2 குழந்தைகளையும் காப்பாற்ற அவர்களை ஜன்னல் வழியாக வெளியே வீசினார். பின்னர் அவரும் தப்பினார்.

கீழே வீசப்பட்ட 2 குழந்தைகளும் வீட்டு அருகே உள்ள நடைபாதையில் வந்து விழுந்தனர்.

அதற்குள் தீ பிடித்த விஷயம் பற்றிய அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு வந்தனர்.

கீழே வீசப்பட்ட குழந்தைகள் எந்த காயமும் இல்லாமல் நடைபாதையில் விழுந்து கிடந்தனர். அவர்களை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

ஆனால், தாயாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மஸ்கெலியா ஓயாவில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு…!!
Next post இங்கிலாந்து கடைகளில் மாட்டு சிறுநீர் விற்பனை: சுகாதார அமைப்புகள் எதிர்ப்பு..!!