பாகிஸ்தானில் பட்டப்பகலில் ராணுவ கர்னல் சுட்டுக்கொலை…!!
Read Time:1 Minute, 14 Second
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பட்டப்பகலில் ராணுவ கர்னல் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள ஹயாத்தாபாத் பகுதியில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடித்துவிட்டு ராணுவ கர்னல் தாரிக் கபூர் என்பவர் நேற்று பிற்பகல் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சர்பன்ட் ரிங் சாலை அருகே வந்தபோது அடையாளம் தெரியாத சிலநபர்கள் அவரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பியோடினர்.
ரத்தவெள்ளத்தில் சுருண்டுவிழுந்த கபூர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். பலியான கபூரின் தந்தையும் முன்னாள் ராணுவ மேஜர் ஜெனரல் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating