மஸ்கெலியா ஓயாவில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு…!!

Read Time:2 Minute, 8 Second

805382981Waterமஸ்கெலியா மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மஸ்கெலியா ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் (12.03.2016) அன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

மஸ்கெலியா சாமிமலை கவரவில தோட்டத்தில் உறவினர் வீட்டிற்கு வந்த இவா் 12.03.2016 அன்று காலை வேளையில் தனியாக நீராடச் சென்றுள்ளார்.

அதன் பின் இவர் நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென காணாமல் போயுள்ளதாக அப்பிரதேசத்தில் இருந்த பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அதன் பின் காணாமல் போனவரை பிரதேசவாசிகள் தேடும் பணியில் ஈடுப்பட்ட போது சுமார் 1 மணித்தியாலயங்களின் பின் சடலத்தை மஸ்கெலியா ஓயாவிலிருந்து மீட்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவா் பாணந்துறை பகுதியை சேர்ந்த 21 வயது மதிக்கதக்க எஸ்.பாக்கியநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தர்.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் பாணந்துறையிலிருந்து மஸ்கெலியா சாமிமலை கவரவில பகுதியில் உறவினரின் வீட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூன்று உணவுகள்…முக்கிய நன்மைகள்…!!
Next post தீயிலிருந்து காப்பாற்ற 2–வது மாடியில் இருந்து குழந்தையை ஜன்னல் வழியாக வீசிய தாய்…!!