முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாக கூறி 8 வயது மகனை மருத்துவமனை முன் விட்டுச்சென்ற தாய்…!!
அமெரிக்காவில் முரட்டுத்தனமாக நடந்துக்கொள்வதாக கூறி தனது 8 வயது மகனை மருத்துவமனை வாசலில் தாய் ஒருவர் விட்டுச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பப்வம் மேற்கு ஜோர்டான் பள்ளதாக்கில் ஒரு மாதத்திற்கு முன்னர் நடந்துள்ளது. மருத்துவமனை முன் ஒரு 8 வயது சிறுவன் நின்றுள்ளான். மருத்துவமனை ஊழியர்கள் சென்று பார்த்த போது அவனிடம் ஒரு கடிதம் இருந்துள்ளது. அந்த கடித்தில் “ முரட்டுத்தனமாகவும், அடங்காதகவனாகம் உள்ளான். இவனை இதற்கு மேல் வீட்டில் வைத்துக்கொள்ள முடியாது. நான் ஒன்றும் மோசமான தாய் இல்லை.” என்று கூறப்பட்டு இருந்தது.
தற்போது அந்த பெண் மீது சீறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.
நான்கு குழந்தைகளை என்னிடம் விட்டுவிட்டு கணவன் பிரிந்து சென்றுவிட்டதால், என்னால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. இப்போது என் கணவர் திரும்பி வந்துவிட்டார். என் மகனை திரும்ப அழைத்து செல்ல விரும்புகிறேன் என்று அந்த பெண் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Average Rating