வீட்டு பாடம் செய்யாத மாணவர்களை நிர்வாணமாக நிற்கவைத்தவர்கள் மீது எப்.ஐ.ஆர்….!!
Read Time:1 Minute, 8 Second
மும்பையில் வீட்டு பாடம் செய்யாத மாணவர்களை நிர்வாணமாக நிற்கவைத்த ஆசிரியர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
மால்வாணி பகுதியில் இருக்கும் ஸ்ரீ தனியார் பயிற்சி வகுப்பில் படிக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது படிக்கும் இரண்டு மாணவர்கள் தங்களின் வீட்டுப் பாடத்தை செய்யவில்லை. எனவே இவர்களுக்கு தண்டனை வழங்கும் விதமாக இருவரையும் நிர்வாணமாக வகுப்பு வெளியில் நிற்கவைத்துள்ளனர்.
அந்த வழியாக நடந்து சென்றவர்கள் இதை தங்களின் போனில் படம் பிடித்து வாட்ஸ் ஆப்பில் பரப்பியதை அடுத்து, காவல்துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தனியார் பயிற்சி வகுப்பை நடத்திவரும் மூன்று பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
Average Rating