திருமணத்துக்கு முன்நாள் வேறொரு நபருடன் தனிமையில் இருந்த மகளை கொன்று பண்பாட்டை காத்த உத்தமத் தாய்..!!
டெல்லியில் உள்ள லோக்நாயக் ஆஸ்பத்திரிக்கு மயக்கநிலையில் இருந்த ஒரு இளம்பெண்ணை அவரது தாயாரும், சகோதரரும் தூக்கி வந்தனர். திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அந்த இளம்பெண் மயங்கி விழுந்தாக அவரது தாயார் கூறியதை நம்ப மறுத்த டாக்டர்கள் இதுதொடர்பாக அருகாமையில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் விரைந்துவந்து விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரை சேர்ந்த அந்தக் குடும்பம் சில ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியில் வந்து குடியேறியுள்ளது. குடும்பத் தலைவர் சமீபத்தில் இறந்துப்போனதால் அவரது மகன் இங்குள்ள ஒரு தொழிற்சாலையில் எலக்ட்ரீஷியனாக வேலைபார்த்து வருகிறார்.
இந்நிலையில், தனது ஒரே சகோதரியை காசியாபாத் பகுதியை சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு திருமணம் செய்துவைக்க அவர் ஏற்பாடு செய்தார். மார்ச் 13-ம் தேதி (நேற்று) திருமணம் நடைபெறவிருந்த நிலையில் வீடு முழுவதும் உற்றார், உறவினர் குவிந்திருந்தனர். நேற்று முன்தினம் (12-ம் தேதி) இரவு வெளியே சென்றிருந்த மணமகளின் தாயார் வீட்டுக்கு திரும்பியபோது, அதே வீட்டில் குடியிருக்கும் ஒரு வாலிபருடன் தனது மகள் விபரீத உறவில் மூழ்கிப்போய் இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.
இளம்பெண்ணின் தாயாரை பார்த்ததும் அந்த வாலிபர் நைசாக அங்கிருந்து நழுவி, ஓடிவிட்டார். அமையவிருந்த நல்ல வாழ்க்கையை கெடுத்துக் கொண்டதுடன், குடும்பத்துக்கும் தீராதப் பழியையும், அவமானத்தையும் ஏற்படுத்திய மகளை இனியும் உயிருடன் விடக்கூடாது எனமுடிவெடுத்த அவர், அங்கு கிடந்த தலையணையை எடுத்து மகளின் முகத்தில் போட்டு அழுத்தி கொல்ல முயன்றுள்ளார்.
மூச்சுத்திணறலால் அந்த இளம்பெண் உயிருக்குப்போராடிய நிலையில் உடனடியாக மகனை வரவழைத்து, நடந்த விபரத்தை கூறி ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றபோது போலீசாரின் விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் வெளியானது. இதையடுத்து, மகளைக் கொன்ற தாயையும், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது மகனையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
Average Rating