மாப்பிள்ளையுடன் நடனமாட வற்புறுத்தியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!!
உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ளது ரசூல்பூர். இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் துல்காபூரை சேர்ந்த ஜிதேந்திரா– குடியா ஆகியோருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
மணமகள் குடியா வரவேற்பு நிகழ்ச்சிக்காக மேடை ஏறினார். அப்போது மணமகன் ஜிதேந்திரா மற்றும் அவரது உறவினர்கள் தங்களுடன் நடனமாட வருமாறு அழைத்தார். இதற்கு குடியா மறுப்பு தெரிவித்தார்.
இதனால் கோபம் அடைந்த ஜிதேந்திரா மணமகளின் உறவினருடன் தகராறில் ஈடுபட்டு அவரது கன்னத்தில் அறைந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடியா தனது மண மாலையை கழற்றி ஜிதேந்திராவின் முகத்தில் வீசி எறிந்து விட்டு மேடையில் இருந்து கீழே இறங்கினார். அத்துடன் திருமணத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். மணமகன் ரவுடித்தனமாக நடந்து கொண்டதால் குடியாவின் குடும்பத்தினர் அவரது முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த ஜிதேந்திரா மீண்டும் தகராறில் ஈடுபட்டார். அப்போது சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ஜிதேந்திரா உள்பட மணமகன் வீட்டார் 6 பேரை கைது செய்தனர். குடியாவின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியதால் ஜிதேந்திராவும் அவரது உறவினர்களும் விடுவிக்கப்பட்டனர்.
Average Rating