யாழில் கத்திமுனையில் பல மில்லியன் பெறுமதியான நகைகள் கொள்ளை..!!
யாழ். மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் கத்தியைக் காட்டி மிரட்டி பெறுமதியான நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக தெல்லிப்பளைப் பொலிசார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 12.30 மணியளவிலேயே இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகங்களை கறுப்புத் துணியால் மூடிய படி கத்திகள், பொல்லுகள் சகிதம் வீட்டுக்குள் நுழைந்த ஐந்து பேர் கொண்ட குழுவொன்று, வீட்டிலிருந்தவர்களை மிரட்டி, அங்கிருந்த 2.18 மில்லியன் ரூபாய் பெறுமதியான 50 பவுண் நகை மற்றும் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் கணவன், மனைவி மற்றும் 3 பிள்ளைகள் வசித்து வருவதாகவும் கணவன் சம்பவ தினத்தில் கொழும்புக்குச் சென்றிருந்த நிலையிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இது தொடர்பில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெல்லிப்பளைப் பொலிசார் தெரிவித்தனர்.
Average Rating