பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியுமா?: இல்லை என்கிறது புதிய ஆய்வு முடிவு…!!

Read Time:1 Minute, 39 Second

b6b95711-dcce-42ec-a634-64cba6cd285d_S_secvpfவருமானம் அதிகரித்தால் தங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். ஆனால் பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தொடர்பு இல்லை என்கிறது புதிய ஆய்வு முடிவு.

இங்கிலாந்தில் உள்ள ஸ்டிர்லிங் பல்கலைக்கழகம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியை சேர்ந்த 18 ஆயிரம் மக்களிடம் மேற்கொண்ட ஆய்வில் மேற்குறிப்பிட்ட முடிவு கிடைத்துள்ளது. ஆய்வாளர்கள் ஒன்பது ஆண்டுகளாக 18 ஆயிரம் பேரின் வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சி, மனநிறைவு பற்றி தரவுகளை திரட்டி ஆய்வு செய்தார்கள்.

மனிதர்களின் வருமானம் அதிகரிக்கும் போது அவர்களின் மகிழ்ச்சியையோ அல்லது மனநிறைவையோ அனுபவிப்பது இல்லை. மாறாக வருமானம் குறையும் போது மன அழுத்தமும், மகிழ்ச்சியின்மையும் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொருளாதார இழப்பு பயத்தில் இருந்து மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதன் மூலம் மகிழ்ச்சியை அதிகரிக்க முடியும் என்று ஆய்வு கூறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாப்பிள்ளையுடன் நடனமாட வற்புறுத்தியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!!
Next post பாகிஸ்தானில் கனமழைக்கு 50 பேர் பலி: 75 வீடுகள் இடிந்தன…!!