37 உயிர்களை பறித்த அங்காரா கார் குண்டு வெடிப்பை அரங்கேற்றிய பெண் தீவிரவாதி…!!
Read Time:1 Minute, 12 Second
துருக்கி நாட்டின் தலைநகரான அங்காராவில் பஸ் நிலையம், மற்றும் மெட்ரோ ரெயில் நிலையம் இருக்கும் பகுதியில் நேற்று குர்தீஸ் தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 37 பேர் உயிர் இழந்தனர். 125 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலை ஒரு பெண் தீவிரவாதி நடத்தியுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.
குர்தீஸ்தான் தொழிலாளர்கள் கட்சி என்ற தீவிரவாத இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டில் சேர்ந்த அந்தப் பெண், துருக்கியின் கார்ஸ் நகரில் கடந்த 1992-ம் ஆண்டு பிறந்தவர் என தெரியவந்துள்ளது. தற்போது 24 வயதாகும் அந்தப் பெண், பயங்கரமான வெடிகுண்டுகளால் நிரப்பப்பட்ட ஒருகாரை ஓட்டிவந்து இந்த தாக்குதலை நடத்தியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Average Rating