விருதுநகர்–சிவகாசியில் தூக்குப்போட்டு மாணவர்கள் தற்கொலை…!!
விருதுநகர் அருகே உள்ள சூரங்குடியை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் சூர்யா (வயது22). இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ., படித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை அவர் வீட்டில் தனியாக இருந்தார்.
வெளியே சென்றிருந்த பெற்றோர் இரவில் வீடு திரும்பியபோது சூர்யாவை காணவில்லை. அவரை தேடியபோது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து மல்லாங்கிணறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்…
சிவகாசியை சேர்ந்த தங்கேஸ்வரன். இவரது மகன் சுந்தரமகாலிங்கம் (14). 8–ம் வகுப்பு படித்து வந்தான். இவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating