வளர்ப்பு நாயுடன் கார் ஓட்டியபோது ஏற்பட்ட விபரீதம்: உயிருக்கு போராடும் பெண்..!!

Read Time:2 Minute, 1 Second

downloadசுவிட்சர்லாந்து நாட்டில் வளர்ப்பு நாயை ஏற்றிக்கொண்டு பெண் ஒருவர் கார் ஓட்டியபோது நிகழ்ந்த திடீர் விபத்தில் நாய் பலியானதுடன் ஓட்டுனர் தற்போது உயிருக்கு போராடி வருகிறார்.

சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Oberonz என்ற பகுதியை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன் கடந்த சனிக்கிழமை பிற்பகல் வேளையில் காரில் பயணித்துள்ளார்.

அப்போது, சாலையில் சென்றுக்கொண்டு இருந்த அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் பெண் ஓட்டுனருக்கும் வளர்ப்பு நாயிற்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த ராகா மீட்புக்குழுவினர் இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக்கொண்டு இருந்தபோது வளர்ப்பு நாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

எனினும், காரை ஓட்டி வந்த பெண் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று கடந்த சனிக்கிழமை அன்று பேசில் மாகாணத்தில் நிகழ்ந்த 2 விபத்துக்களில் 82 வயதான முதியவர் உடபட இருவர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அன்றாடம் இதை செய்தால் மருத்துவரிடம் போக வேண்டாம்…!!
Next post மட்டு—கல்முனை வீதியில பாரிய விபத்து; வாகனங்கள் சேதம்..!!