மட்டு—கல்முனை வீதியில பாரிய விபத்து; வாகனங்கள் சேதம்..!!
Read Time:1 Minute, 12 Second
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி எல்லையில் வியாபார விற்பனை நிலையமொன்றின் மீது டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனம் பெருமளவில் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கல்முனை பக்கமாக இருந்து மட்டக்களப்பு பகுதி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த சாரதியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் வீதியில் நிறுத்தி வைக்கப்ட்டிருந்த இரு நகரசபை வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன.
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
Average Rating