உயிருடன் தந்தை மற்றும் மகன் மீது தீ வைக்கப்பட்டுள்ளது..!!

Read Time:1 Minute, 40 Second

imagesபதுளை, எல்ல, நாவலகம பகுதி பிரதேசத்தில் இன்ற அதிகாலை இரண்டு மணியளவில் இடம்பெற்ற தீ விபத்தில் தந்தையும், மகனும் பலியாகியுள்ளனர்.

இருவரும் அறையில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெற்ரோல் ஊற்றி குறித்த நபர்கள் எரியூட்டப்பட்டிருக்கலாம் என பொலிஸார் நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தச் சம்பவத்தினால் 49 வயதையுடைய வியாபாரியான உபாலி காமினி குணசேகர மற்றும் பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரியில் 11ம் தரத்தில் கல்வி கற்கும் ரவிஸ்க குணசேகர என்ற மாணவனும் கடுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தினால் கடுங்காயங்களுக்கு உள்ளான இருவரும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மகன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டு—கல்முனை வீதியில பாரிய விபத்து; வாகனங்கள் சேதம்..!!
Next post அன்னை தெரேசாவுக்கு செப்டம்பர் 4-ம் தேதி புனிதர் பட்டம் வழங்கப்படும்: போப் ஆண்டவர் அறிவிப்பு…!!