ஈராக்கில் துருக்கி போர் விமானங்கள் ஆவேச தாக்குதல்: 45 குர்திஷ் போராளிகள் பலி…!!
Read Time:1 Minute, 18 Second
ஈராக் நாட்டின் வடக்கே குர்திஷ் போராளிகளின் ஆதிக்கம் நிறைந்த குவான்டில் மலைப்பகுதியில் இன்று துருக்கி ராணுவத்தை சேர்ந்த 11 போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் 45 குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டனர்.
எப்-16 மற்றும் எப்-4 ரக ஜெட் போர் விமானங்கள் நடத்திய சரமாரியாக குண்டுகளைவீசி நடத்திய இந்த தாக்குதலில் இரு ஆயுத கிடங்குகளும், இரு ராக்கெட் ஏவுதளங்களும் அழிக்கப்பட்டதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கி தலைநகர் அங்காராவில் நேற்று முன்தினம் குர்திஷ் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 36 பேர் பலியாகினர். இந்த உயிர்பலிக்கு பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையாக ஈராக்கில் உள்ள குர்திஷ் போராளிகள்மீது இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
Average Rating