கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர் படுகொலை: வீடுபுகுந்து வெட்டிச்சாய்த்த கும்பல்…!!

Read Time:1 Minute, 48 Second

8d15906e-f779-499b-9022-eade30bb4e8e_S_secvpfகேரள மாநிலத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆலப்புழா மாவட்டம் ஏவூரைச் சேர்ந்தவர் சுனில் குமார்(வயது 28). இளைஞர் காங்கிரஸ் உறுப்பினரான இவர் இன்று அதிகாலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது உள்ளே நுழைந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில், நிலைகுலைந்த சுனில் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். இந்த கொலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பான இந்திய ஜனநாயக இளைஞர் முன்னணியில் (டிஒய்எப்ஐ) இருந்த சுனில் குமார், அந்த அமைப்பில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்துள்ளார். இதனால், உள்ளூர் டிஒய்எப்ஐ தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

10 பேர் கொண்ட கும்பல் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், சந்தேகத்தின் பேரில் 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இது என்ன பல்லா இல்ல பாராங்கல்லா?? என கேட்க தூண்டும் காணொளி…!!
Next post பெர்லின் நகரில் குண்டுவெடிப்பு: கார் டிரைவர் பலி…!!