திண்டுக்கல் அருகே கலவரத்தை தூண்டியதாக 25 பேர் கைது…!!

Read Time:2 Minute, 3 Second

01011098-4469-43e3-a91a-1a423090349d_S_secvpfதிண்டுக்கல் அருகே நாகக்கோனானூரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வேடசந்தூர் அடுத்துள்ள விருதலைப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பஞ்சாலைத் தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் வேனை வைரக்கவுண்டனூரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் ஓட்டிச் சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிள் மீது வேன் உரசியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், வேன் டிரைவர் தாக்குவதற்காக தனது உறவினர்களை அழைத்துச் சென்றார்.

அப்போது டிரைவர் ராமலிங்கத்திற்கு பதிலாக அய்யனார் என்பவர் மாற்றுப்பணியில் இருந்துள்ளார். இதை அறியாத மணிகண்டனின் உறவினர்கள் அய்யனாரை தாக்கியுள்ளனர்.

இதையறிந்த ராமலிங்கம், தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்துச் சென்று மணிகண்டனின் உறவினரான கார்த்திக் என்பவரை தாக்கினார்.

இந்த மோதல் தொடர்பாக மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் அய்யனார் மீதும், கார்த்திக் அளித்த புகாரின் பேரில் 13 பேர் மீது என மொத்தம் 32 பேர் மீது கூம்பூர் மற்றும் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து 2 பெண்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையிலும், 9 பேர் மேலூர் சிறையிலும், 6 பேர் திண்டுக்கல் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூதலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி…!!
Next post உடுமலையில் பதட்டத்தை ஏற்படுத்திய மாணவர் கொலையில் 4 பேர் சிக்கினர்…!!