உடுமலையில் பதட்டத்தை ஏற்படுத்திய மாணவர் கொலையில் 4 பேர் சிக்கினர்…!!

Read Time:3 Minute, 48 Second

d49d8a56-a338-4d71-b3a6-2e15613b5ecc_S_secvpfஉடுமலையில் கலப்பு திருமணம் செய்த மாணவர் சங்கர், இவரது மனைவி கவுசல்யா ஆகியோரை பொதுமக்கள் முன்னிலையில் கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சங்கர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து கொலை வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கவுசல்யாவின் திருமணத் துக்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அவரை மிரட்டி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும், கவுசல்யாவும் எனது பெற்றோர் தூண்டுதலின் பேரிலேயே சங்கர் கொலை செய்யப்பட்டதாக போலீசாரிடம் புகார் கூறினார்.

இந்த கொலை தொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி(48) நேற்று நிலக்கோட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் சின்னசாமி மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

சங்கரை கும்பல் வெட்டிய காட்சிகள், சம்பவம் நடந்த வணிக வளாகத்தின் முன்புறம் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. இதில் கொலையாளிகள் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்து சங்கரையும், கவுசல்யாவையும் வழிமறித்து அரிவாளால் வெட்டிய காட்சிகள் தெளிவாகி தெரிந்தது. இதன்மூலம் நடத்தபட்ட விசாரணையில் பழனியை சேர்ந்த மணிகண்டன், மதன், செல்வகுமார், ஜெகதீசன் ஆகியோர் இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது.

இவர்கள் 4 பேரும் திண்டுக்கல் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த தனிப்படை போலீசார் மணிகண்டன் உள்பட 4 பேரையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

இதில் செல்வகுமார், மதன், ஜெகதீசன் ஆகியோர் கவுசல்யாவின் தந்தை சின்ன சாமியின் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆசையாய் வளர்த்த மகள் காதலனுடன் சென்று விட்டாளே என சின்னச்சாமி அடிக்கடி புலம்பி வந்துள்ளார். எனவே அவருக்கு உதவி செய்யும் நோக்கில் கவுசல்யாவை பிரித்து அழைத்து வருவதற்காக சென்றதாகவும், ஆனால் அவர் வர மறுத்ததால் இருவரையும் சரமாரியாக வெட்டியதாக கூறி உள்ளனர். இந்த கொலையின் பின்னணியில் வேறு யார்–யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளதா? அவர்கள் எங்கு பதுங்கி உள்ளனர்? என விசாரணை நடந்து வருகிறது.

இதுகுறித்து தனிப்படை போலீஸ் அதிகாரிகளிடம் கேட்ட போது, கொலை தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். இன்று மாலைக்குள் கொலையில் தொடர்புடைய அனைவரையும் பிடித்து விடுவோம் என்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திண்டுக்கல் அருகே கலவரத்தை தூண்டியதாக 25 பேர் கைது…!!
Next post அவினாசி அருகே கள்ளக்காதலியின் மகனை தீர்த்துக் கட்டிய வாலிபர் நண்பர்களுடன் கைது…!!