இரத்தினக்கல் தோண்டியவர் மண்மேடு சரிந்து வீழ்ந்து பலி..!!

Read Time:1 Minute, 30 Second

timthumbஇரத்தினக்கல் தோண்டிக் கொண்டிருந்த ஒருவர், மண்மேடு சரிந்து விழுந்ததில், பலியான சம்பவமொன்று ஹல்துமுல்லை -ஊவாதென்ன நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊவாதென்னையைச் சேர்ந்த எஸ்.எய்ச்.ஜேமிஸ் என்ற 59 வயது நிரம்பிய 5 பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சரிந்து விழுந்த மண்மேட்டை அகற்றி, மண்மேட்டில் நசிந்த நபரை ஹல்துமுல்லை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அந்நபர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் ஹல்துமுல்லை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சட்ட விரோதமான முறையிலேயே இரத்தினக்கல் தோண்டும் போது மேற்படி மரணம் சம்பவித்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹல்துமுல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரை தாக்க முயன்ற 4 பேருக்கு தடுப்புக் காவல்…!!
Next post யாழில் ரவுடித்தனத்திற்கு இடமில்லை! 24மணி நேர கண்காணிப்பு குழு தயார்..!!