உயிரோடு இருக்கும் போது கணவர் இறந்ததாக கூறி சொத்தை அபகரித்த மனைவி..!!
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பாநாயுடு. இவரது மனைவி வீரம்மா, சுப்பையா, ரமணா என 2 மகன்கள் உள்ளனர். சுப்பா நாயுடு சரியாக வேலைக்கு செல்லாததால் அவரை வீரம்மா, மகன்கள் சுப்பையா, ரமணா வீட்டை விட்டு துரத்திவிட்டனர்.
இதனால் சுப்பாநாயுடு அங்குள்ள தியேட்டரில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்தார். தனது சகோதரர் வீட்டில் தங்கினார். இந்த நிலையில் சுப்பா நாயுடு பெயரில் உள்ள வீட்டை அபகரிக்க வீரம்மா முடிவு செய்தார்.
இதுகுறித்து தனது மகன்களிடம் தெரிவித்தார். அதற்கு அவர்களும் சம்மதித்தனர். இதற்காக சுப்பா நாயுடு இறந்துவிட்டதாக கூறி சான்றிதழ் கேட்டு மனு கொடுத்தனர்.
மேலும் தனது கணவர் உடலை மயானத்தில் எரித்ததாக கூறி மயான காவலாளியின் கையெழுத்து வாங்கி கொடுத்து இருந்தார்.
இதன் மீது விசாரணை நடத்த வீரம்மா வீட்டுக்கு அதிகாரிகள் சென்ற போது, அவர் நெற்றியில் பொட்டு வைத்திருப்பதையும், காலில் மெட்டி அணிந்திருப்பதையும் கண்டு சந்தேகம் அடைந்தனர். உடனே சுப்பாநாயுடுவின் உறவினர்களிடம் விசாரித்த போது அவர் உயிருடன் இருப்பதும் சொத்துக்காக அவர் இறந்ததாக வீரம்மா நாடகமாடியது தெரிந்தது
இதுகுறித்து தாசில்தார் போலீசில் புகார் செய்தார். வீரம்மா, மகன்கள் சுப்பையா, ரமணா ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Average Rating