ஊனைமாஞ்சேரியில் கல் உடைக்கும் எந்திர பெல்ட்டில் சிக்கி சிறுவன் பலி..!!
Read Time:43 Second
திருவண்ணாமலை மாவட்டம் அண்டம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், இவரது மகன் சதீஷ் (வயது 16). இவர் வண்டலுரை அடுத்த ஊனைமாஞ்சேரியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் கல் உடைக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
நேற்று வேலை செய்யும் போது கல் உடைக்கும் எந்திர ‘பெல்ட்’டில் சிக்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating