மாணவியுடன் பாலியல் உறவு: இங்கிலாந்து கால்பந்து வீரரை பிரிந்து சென்ற காதலி…!!
இங்கிலாந்து கால்பந்து வீரரும், பிரீமியர் லீக் நட்சத்திர ஆட்டக்காரருமான ஆடம் ஜான்சன் பாலியல் வழக்கில் சிக்கி உள்ளார். 15 வயது பள்ளி மாணவி ஒருவரோடு பாலியல் உறவு கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு மார்ச் 24-ம் தேதி வரை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
24-ம் தேதி அவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜராகும்போது, வயது குறைந்த பெண்ணுடன் பாலியல் உறவு வைத்த குற்றத்திற்காக அவருக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலியல் வழக்கில் தண்டனை பெற உள்ளதால் அவரது காதலி, 13 மாத குழந்தையுடன் அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். இருப்பினும் சிறை செல்வதற்கு முன் தன் குழந்தையைப் பார்க்க வேண்டும் என ஆடம் ஜான்சன் விரும்பினார். இதனை ஏற்றுக்கொண்ட அவரது காதலியும், குழந்தையை ஜான்சனின் வீட்டிற்கு கொண்டு வந்து காட்டியுள்ளார்.
Average Rating