கொருக்குப்பேட்டையில் ஆட்டோ டிரைவர் குத்தி கொலை – தண்டவாளம் அருகே உடல்வீச்சு…!!

Read Time:1 Minute, 38 Second

87eb2b35-0855-4fd4-8e99-89e931a741f3_S_secvpfகொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ். ஆட்டோ டிரைவர். வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழிலும் செய்து வந்தார்.

நேற்று மதியம் சுரேஷ் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் இன்று காலை கொருக்குப்பேட்டை – தண்டையார்பேட்டை இடையே ரெயில் தண்டவாளம் அருகே சுரேஷ் பிணமாக கிடந்தார்.

அவரது அடிவயிற்றில் கத்தியால் குத்திய காயம் இருந்தது. மர்ம உறுப்பும் சிதைக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆர்.கே.நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சுரேஷ் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சுரேஷ் உடல் அருகே மது பாட்டில்கள் கிடந்தது. எனவே மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் அவரை குத்தி கொன்று உடலை தண்டவாளம் அருகே வீசி இருக்கலாம் எனறு போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மேலும் முன்விரோதத்தில் யாராவது கொலை செய்து வீசினார்களா? என்று போலீசார் விசாரிக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமிகளை கற்பழித்த வழக்கு: இரட்டைக் குடியுரிமை பெற்றவருக்கு 150 ஆண்டு ஜெயில் தண்டனை…!!
Next post செங்கல்பட்டில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை…!!