ஒரு தலைக்காதல்: சட்டக்கல்லூரி மாணவியை தாக்கிய ஆசிரியர் கைது..!!

Read Time:1 Minute, 44 Second

downloadசென்னையை சேர்ந்த பெண் ஒருவர் கோவை அருகே உள்ள வடவள்ளி ஐ.ஓ.பி. காலனியில் தங்கி இருந்து சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரை அந்த பகுதியை சேர்ந்த திலக்பிரபு (33). ஆசிரியர். ஒருதலையாக காதலித்து வந்தார். திவ்யாவை அடிக்கடி சந்தித்து தனது காதலை கூறிவந்தார். ஆனால் திவ்யா காதலிக்க மறுத்து விட்டார்.

சம்பவத்தன்று திவ்யா தனது வீட்டு முன்பு நின்று கல்லூரி பேராசிரியர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்தவழியாக வந்த திலக்பிரபு ஆத்திரம் அடைந்தார்.

உடனடியாக திவ்யாவிடம் சென்று வாக்குவாதம் செய்தார். வாக்குவாதம் முற்றவே அங்கு இருந்த கட்டையால் திவ்யாவை தாக்கி, ஆடையை பிடித்து கீழே தள்ளினார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் திலக்பிரபுவிடம் இருந்து திவ்யாவை மீட்டனர்.

பின்னர் இது குறித்து திவ்யா வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் திவ்யாவை தாக்கிய ஆசிரியர் திலக்பிரபுவை கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமை உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனியார் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளினி தூக்கிட்டு தற்கொலை…!!
Next post தெருவில் வாழும் நபருக்கு 14 இலட்சம் ரூபா பரிசு..!!