சொத்திற்காக விதவையான பெண் : பணத்தின் மேல் மோகம்..!!

Read Time:2 Minute, 20 Second

timthumb (1)கணவர் இறந்­து­விட்­ட­தாக கூறி அவ­ரது சொத்தை மனைவி ஒருவர் அப­க­ரித்த சம்­பவம் ஆந்­தி­ராவில் இடம்­பெற்­றுள்­ளது. ஆந்­திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூர் கிரா­மத்தை சேர்ந்­தவர் சுப்­பா­நா­யுடு.

இவ­ரது மனைவி வீரம்மா இவர்­க­ளுக்கு சுப்­பையா, ரமணா என 2 மகன்கள் உள்­ளனர். சுப்பா நாயுடு சரி­யாக தொழி­லுக்கு செல்­லா­ததால் அவரை அவ­ரது மனை­வியும் பிள்­ளை­களும் வீட்டை விட்டு துரத்­தி­விட்­டனர்.

இதனால் சுப்­பா­நா­யுடு அங்­குள்ள திரை­ய­ரங்கில் காவ­லா­ளி­யாக வேலைக்கு சேர்ந்துள்ளார். தனது சகோ­தரர் வீட்டில் தங்­கினார். இந்­நி­லையில் சுப்பா நாயுடு பெயரில் உள்ள வீட்டை அப­க­ரிக்க வீரம்மா முடிவு செய்தார். இது­கு­றித்து தனது மகன்­க­ளிடம் தெரி­வித்தார். அதற்கு அவர்­களும் சம்­ம­தித்­தனர். இதற்­காக சுப்பா நாயுடு இறந்­து­விட்­ட­தாக கூறி சான்­றிதழ் கேட்டு மனு கொடுத்­துள்ளனர்.

மேலும் தனது கணவர் உடலை மயா­னத்தில் எரித்­த­தாக கூறி மயான காவ­லா­ளியிடம் கையெ­ழுத்து வாங்கியுள்ளனர். இதன் மீது விசா­ரணை நடத்த வீரம்மா வீட்­டுக்கு அதி­கா­ரிகள் சென்ற போது, அவர் நெற்­றியில் பொட்டு வைத்­தி­ருப்­ப­தையும், காலில் மெட்டி அணிந்­தி­ருப்­ப­தையும் கண்டு சந்­தேகம் அடைந்­தனர்.

உடனே சுப்­பா­நா­யு­டுவின் உற­வி­னர்­க­ளிடம் விசா­ரித்த போது அவர் உயி­ருடன் இருப்­பதும் சொத்­துக்­காக அவர் இறந்­த­தாக வீரம்மா நாட­க­மா­டி­யதும் தெரி­ய­வந்­துள்­ளது. இதுகுறித்து மனைவி வீரம்மா, மகன்கள் சுப்பையா, ரமணா ஆகியோர் மீது பொலிஸார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சும்மா போறவர்களை கூப்பிட்டு!! இவர்கள் செய்யும் கொடுமையை பாருங்கள்…!!
Next post இங்கிலாந்தில் பிடிபட்ட 4 அடி நீள எலி..!!