நுரைச்சோலை மின்நிலையச் செயற்பாடு படிப்படியாக வழமைக்கு..!!
Read Time:1 Minute, 12 Second
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 300 மெகா வோட் மின்சாரம் தேசிய மின்விநியோக கட்டமைப்புக்கு தற்போதைய நிலையில் வழங்கப்படுகின்றது
மின்சக்தி மற்றும் சக்திவலு அமைச்சின் பணிப்பாளர் சுலக்ஷணா ஜயவர்தன இதனை தெரிவித்தார்.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தியை இன்று காலை முதல் தேசிய மின்விநியோக கட்டமைப்புடன் இணைக்க முடிந்தாக அவர் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில் இன்று இரவாகும் போது, 24 மணி நேரம் மின்விநியோகத்தை வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 900 மெகாவோட் மின்சாரம், தேசிய மின்விநியோக கட்டமைப்புக்கு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Average Rating