நடத்தை சந்தேகத்தில் மனைவி, மாமியார் உள்பட 3 பேரை வெட்டி தீவைத்த வாலிபர்: போலீசுக்கு பயந்து தற்கொலை…!!

Read Time:3 Minute, 45 Second

f0c1e2c2-509b-4957-891f-fd3d8674495b_S_secvpfஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்கண்ணு மகன் சக்திவேல் (வயது 33). இவருக்கும் கல்லேரி கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன் மகள் சூரியா (28) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களில் சத்திவேல் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். எனவே சூரியா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 15–ந் தேதி சக்திவேல் சிங்கப்பூரில் இருந்து காட்டாத்தூருக்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி குறித்த பலர் தவறான தகவல்களை கூறியுள்ளனர். இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஆத்திரம டைந்த சக்திவேல் தனது மனைவியை பார்ப்பதற்கு கல்லேரி கிராமத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவரது நடத்தை குறித்து கேட்டபோது இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை பார்த்த சூரியாவின் தாய் சித்ரா (45) மற்றும் பாட்டி தனம் (65) இருவரும் சேர்ந்து சக்திவேலை தட்டி கேட்டதோடு கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி, அவரது தாய் மற்றும் பாட்டி ஆகியேரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மூன்று பேர் மீதும் தான் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இந்த தீ சக்திவேல் மீதும் பரவியது.

பின்னர் அவர் தீக்காயத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மூன்று பேரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர்களை தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தப்பிச் சென்ற சக்திவேல் போலீசுக்கு பயந்து கல்லேரி கிராமத்தின் அருகே உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அப்பகுதி மக்கள் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவமிடம் வந்த போலீசார். சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி, மாமியார், பாட்டி ஆகியோரை அரிவாளாள் வெட்டிய வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈராக்கில் ராணுவ விமானம் கீழே விழுந்து விபத்து: ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு…!!
Next post போத்தனூரில் பெண்ணை தாக்கி 36 பவுன் நகை – பணம் கொள்ளை…!!