டுபாய் பயணமாகிறார் ஜனாதிபதி மைத்திரி…!!

Read Time:1 Minute, 48 Second

898 (4)இலங்கையில் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய ஹோட்டல் மற்றும் உல்லாச சர்வதேச மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் 26,27,28 ஆம் திகதிகளில் டுபாயில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர். ‘ஆசிய ஹோட்டல் மற்றும் உல்லாச சர்வதேச மாநாடு’ எதிர்வரும் நவம்பர் 27,28,29 ஆம் திகதிகளில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் 80 நாடுகளைச் சேர்ந்த சுமார் 900 முதலீட்டாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இது தொடர்பிலான ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் 26,27,28ஆம் திகதிகளில் டுபாயில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதுடன், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விசேட அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போத்தனூரில் பெண்ணை தாக்கி 36 பவுன் நகை – பணம் கொள்ளை…!!
Next post கிணற்றில் தவறி வீழ்ந்து முதியவர் சாவு…!!