கிணற்றில் தவறி வீழ்ந்து முதியவர் சாவு…!!
Read Time:1 Minute, 4 Second
முல்லைத்தீவு குமுளமுனை மேற்கு பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய காசிநாதர் நாகராசா என்பரே கிணற்றில் நீர் எடுக்கச் சென்ற போது கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் ஒருவகை வலிப்பினால் பாதிக்கப்பட்டவர் என்பதோடு வலிப்பு ஏற்ப்பட்டமையால் கிணற்றில் தவறி வீழ்ந்திருக்கலாம் என குடுப்பத்தினர் சந்தேகம் வெளியிட்டனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைதீவு பொலிஸார் விசாரணைகளின் பின்னர் சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Average Rating