விருந்துக்குச் சென்று கைக்குழந்தையுடன் நடனமாடிய 18 வயது மனைவியை குத்திய 22 வயதான கணவன்…!!
Read Time:1 Minute, 7 Second
விருந்துக்குச் சென்று தனது மனைவி கைக் குழந்தையையும் தூக்கியபடி அங்கிருந்தவர்களுடன் நடனமாடியதை கேள்வியுற்ற கணவன், மனைவியுடன் வாக்கு வாதப்பட்டு மனைவியை கத்தியால் குத்தி படுகாயப்படுத்திவிட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து 22 வயதான கணவனை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமுற்ற சேருநுவர செல்வநகரைச் சேர்ந்த 18 வயதான பெண் மூதூர் வைத்தியசாலையில் கடந்த 14 ஆம் திகதி சேர்க்கப்பட்டார்.
அவர் கைகள் இரண்டும் வெட்டி காயப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Average Rating