சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் கைது…!!
Read Time:56 Second
புத்தளம் – திரிபெஹொ பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் வீட்டில் வைத்தே இந்த குற்ற செயல் இடம்பெற்றுள்ளது.
சிறுமியின் தாய் வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது
மருத்துவ பரிசோதனைக்காக குறித்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை புத்தளம் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating