மின்சார சபை அதிகரிகளுக்கும் அமைச்சருக்கும் இடையில் பேச்சுவார்த்தை..!!

Read Time:1 Minute, 50 Second

imagesஇலங்கை மின்சார சேவை சங்கத்தின் அதிகாரிகளுக்கும் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

மின்சாரத் துறை அமைச்சில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது எழுந்துள்ள சிக்கல்கள் சம்பந்தமாக அங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அந்த பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக சேவை ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்குவதாக இலங்கை மின்சார சேவை சங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்ததாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது மின்சார சபையை கட்டியெழுப்புவதற்காக குறுகிய கால மற்றும் நீண்டகால யோசனைகள் பல இலங்கை மின்சார சேவை சங்கத்தின் அதிகாரிகளினால் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த யோசனைகள் சம்பந்தமாக அவதானம் செலுத்தப்படும் என்று இதன்போது அமைச்சரினால் அந்த அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழில் விபத்து சாரதி நடத்துனர் படுகாயம்…!!
Next post துருக்கி வணிக வீதியில் தற்கொலைப்படை தாக்குதல்: 4 பேர் பலி-20 பேர் காயம்…!!