போரூரில் பெண் கொலையில் மர்மம் நீடிப்பு: சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை…!!

Read Time:2 Minute, 36 Second

f93ff4e7-bd9d-4af3-8899-c8033956ce03_S_secvpfபோரூர் அருகே காரம்பாக்கம் பொன்னி அம்மன் நகரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சித்ரா. அஸ்வினி (3) என்ற மகளும், ஜிதி என்ற 11 மாத ஆண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று இரவு வீட்டில் சித்ராவின் குழந்தைகள் அழுகுரல் நீண்டநேரம் கேட்டுக் கொண்டு இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டு பெண் அங்கு சென்று பார்த்தார். அப்போது சித்ரா ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். தாய் உடல் அருகே 2 குழந்தைகளும் அழுது கொண்டிருந்தன.

இது குறித்து வளசரவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சித்ரா உடலை கைப்பற்றினர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உதவி கமிஷனர் குணசேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, புஷ்பராஜ் ஆகியோர் கொண்ட 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

சித்ரா அணிந்திருந்த நகைகள், பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. இதனால் அவருக்கு தெரிந்தவர்களே கொலை செய்தார்களா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அப்பகுதியில் வீடு, கடைகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அதில் பதிவான காட்சிகள் மூலம் சித்ரா வீட்டுக்கு யார்–யார்? வந்து சென்றார்கள் என்று போலீசார் விசாரிக்கிறார்கள்.

மேலும் முதல்கட்ட விசாரணையில் சித்ரா அடிக்கடி கோபம் அடைந்து கணவரிடம் தகராறு செய்வாராம். நேற்று மதியம் கணவரிடம் செல்போனில் பேசி இருக்கிறார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது. இதுபற்றி கணவர் குமாரிடம் நேற்றுவிசாரித்த போது அவர் பேசும் நிலைமையில் இல்லை.

இன்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் சித்ரா சாவில் மர்மம் நீடிக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளியில் கெமிக்கல் தண்ணீர் விழுந்து மாணவி கண் பார்வை பாதிப்பு…!!
Next post பிளஸ்–2 மாணவி பாலியல் பலாத்காரம்: முன்னாள் நகர செயலாளர் மகன் கைது…!!