பிளஸ்–2 மாணவி பாலியல் பலாத்காரம்: முன்னாள் நகர செயலாளர் மகன் கைது…!!

Read Time:3 Minute, 1 Second

f4ced1e0-974e-433c-b95e-795be54aed6c_S_secvpfராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் ராஜேந்திரன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் பலியாகி விட்டார்.

இவரது மகன் சுரேஷ் (வயது24). கீழக்கரை சொக்க லிங்கநாதர் கோவில் தெருவில் வசிக்கும் இவர், பூ வியாபாரம் செய்து வருகிறார்.

கீழக்கரை அருகே உள்ள புல்லந்தை கிராமத்தை சேர்ந்தவர் நாகமுத்து. இவரது மகள் திவ்யா (வயது19), தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.

இவருக்கும், சுரேசுக்கும் காதல் இருந்து வந்தது. இந்த நிலையில் 17–ந்தேதி இரவு திவ்யா திடீரென மாயமானார். மறுநாள் (18–ந்தேதி) காலை அவளை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து புல்லந்தை கிராமத்தில் சுரேஷ் இறக்கி விட்டார். இதனை கண்ட கிராம மக்கள் அவரை பிடிக்க முயன்றபோது தப்பி ஓடிவிட்டார்.

அதன்பிறகு கருவேலம் காட்டில் பதுங்கிய திவ்யாவை பிடித்து விசாரித்தனர். அப்போது திருமண ஆசைக்காட்டி சுரேஷ், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தெரிவித்தார்.

இதன்பேரில் சுரேஷ் வீட்டிற்கு திவ்யாவின் உறவினர்கள் சென்று திருமணம் செய்ய கேட்டபோது அவர் மறுத்து விட்டாரம். இது குறித்து கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் திவ்யா புகார் செய்தார்.

அதில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சுரேஷ் தன்னுடன் உல்லாசமாக இருந்ததாகவும், தற்போது திருமணத்திற்கு மறுப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் மகேசுவரி விசாரணை நடத்தி சுரேசை கைது செய்தார்.

தொடர்ந்து இன்று காலை சுரேஷ் மற்றும் திவ்யா மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். இதற்கிடையில் சுரேசின் அண்ணன் ராஜ்குமார் (29), கீழக்கரை போலீசில் ஒரு புகார் செய்துள்ளார்.

அதில் எனது தம்பி சுரேசை புல்லந்தையை சேர்ந்த நாகமுத்து உள்பட 3 பேர் கடத்தி சென்றதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போரூரில் பெண் கொலையில் மர்மம் நீடிப்பு: சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை…!!
Next post ஜார்க்கண்டில் மாட்டு வியாபாரிகள் 2 பேர் கொலை: கைகள் கட்டப்பட்ட நிலையில் மரத்தில் பிணமாக தொங்கினர்…!!