பிரித்தானியாவின் கொடூரத் தாய்! இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு நாடகமாடிய சம்பவம்…!!
பிரித்தானிய நாட்டில் பெற்றெடுத்த இரண்டு பிள்ளைகளை கொடூரமாக கொன்றுவிட்டு நீதிமன்றத்தில் நாடகமாடிய தாயாருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Camber நகரில் லெஸ்லி டன்ஃபோர்ட்(37) என்ற தாயார், ஹார்லி டன்ஃபோர்ட் (7) மற்றும் லூசி(3) ஆகிய இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவரது வீட்டில் 7 வயதான மகன் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால், தாயாரிடம் பொலிசார் விசாரணை செய்து வந்துள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்று 6 மாதங்களுக்கு பிறகு, அவரது 3 வயதான மகளும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பொலிசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மகளை கொன்றது தாயார் தான் என நிரூபணம் ஆகியதால், கடந்த 2012ம் ஆண்டு மகளை கொன்ற குற்றத்தை தாயார் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு 7 வருடங்கள் சிறை தண்டனை விதித்தது.
இந்நிலையில், தாயாரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் முதல் மகனையும் அவர் கொலை செய்துள்ளது ஆதாரப்பூர்வமாக தற்போது நிரூபணம் ஆகியுள்ளது.
சுமார் 12 வருடங்களுக்கு பிறகு இந்த குற்றம் தற்போது வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து தாயாருக்கு கூடுதலாக தண்டனை விதிக்கப்பட உள்ளது.
நேற்று நீதிமன்றத்தில் நடந்த இந்த விசாரணையில், இரட்டை கொலைகளை செய்த குற்றத்திற்கான இறுதி தண்டனை எதிர்வரும் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
Average Rating