ஈரானில் தீவிரவாத தலைவர்கள் 4பேரை ராணுவம் சுட்டுக்கொன்றது
Read Time:59 Second
ஈரானிய ராணுவம், அல்கொய்தாவுடன் தொடர்புடைய சன்னி முஸ்லிம் தீவிரவாத தலைவர்கள் 4 பேரை சுட்டுக்கொன்றது. கடவுளின் வீரர்கள் என்ற பெயரிலான குழுவை சேர்ந்த அத 4 பேரும் பாகிஸ்தான் அருகே உள்ள சாலையில் குண்டு வைத்து வெடிக்கச்செய்து 12 ஈரானியர்கள் பலியாக காரணமாக இருந்தவர்கள். அவர்கள் ஈரானில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியவர்கள். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஈரான் ராணுவம் மீது தாக்குதல் நடத்தி 11 பேரை கொன்றதும் கடவுளின் வீரர்கள் இயக்கம் தான். இந்த இயக்கத்தின் தலைவனாக அப்துல் மாலிக் ரெகி இருக்கிறான். கொல்லப்பட்ட 4 பேரில் ரெகி இல்லை.