அழுத குழந்தையை ரொட்டிக் கட்டையால் அடித்துக் கொன்ற கொடூர தந்தை கைது..!!
டெல்லி சாஸ்திரி நகரில் உள்ள குடிசைப்பகுதியை சேர்ந்தவர் நரிஸ் ஷேக்(28). இவரது மனைவி பிர்தவுஸா பேகம். இந்த தம்பதியருக்கு ராகுல்(9), சவுரயா(2) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
ரிக்ஷா ஓட்டும் தொழிலாளியான ஷேக் நேற்று காலை சுமார் 11 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பெண்குழந்தை சவுரயா ஓயாமல் அழுதுள்ளது. குழந்தையை சமாதானப்படுத்தும்படி கூறுவதற்காக மனைவியை தேடிய ஷேக், பிர்தவுஸா வீட்டில் இல்லாததை கண்டு ஆத்திரமடைந்தார்.
குழந்தையை சமாதானப்படுத்தி, அழுகையை நிறுத்த ஷேக் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால் ஆத்திரத்தின் உச்சகட்டத்துக்கு சென்ற அவர், குழந்தையை அடித்தார். வலி தாங்க முடியாத சவுரயா மேலும் சப்தமாக வீரிட்டு அழுததால் ஆவேசமடைந்த ஷேக், வீட்டில் கிடந்த ரொட்டி உருட்டும் கட்டையை எடுத்து குழந்தையை வெறித்தனமாக தாக்கினார்.
தலை மற்றும் முகம் உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் சாய்ந்த குழந்தை சில நிமிடங்களுக்குள் உயிரிழந்தது. இந்த கொடூரக் காட்சிகளை எல்லாம் பீதியுடன் பார்த்துக் கொண்டிருந்த ராகுல் ஓடிச்சென்று அழுதபடி அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் விபரத்தை கூறினர்.
அவர்கள் கும்பலாக வந்து, அந்த கொடூர தந்தைக்கு தர்மஅடி போட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்மீது, கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சவுரயாவின் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating