பாகிஸ்தானில் மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை தீவைத்து எரித்துக் கொன்ற இளம்பெண் போலீசில் சரண்…!!

Read Time:1 Minute, 52 Second

26f051a4-4f6e-4eb5-ab93-d0e5cfd84620_S_secvpfபாகிஸ்தானில் தனது சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை ஒருஇளம்பெண் தீவைத்து எரித்துக் கொன்றுள்ளார்.

கராச்சியின் பிராபாத் பகுதியில் தந்தை ஒருவர் தனது மகள்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பயந்து இதனை வெளியே சொல்லாமல் அவர்கள் மறைத்து வந்துள்ளனர். இந்நிலையில் அவரது இரண்டாவது ஆயிஷா மகள் அவரை தீ வைத்து எரித்துக் கொன்றுவிட்டு கராச்சி போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டு உள்ள ஆயிஷா போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், ”என்னுடைய தந்தை என்னுடைய மூத்த மற்றும் இளைய சகோதரியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். என்னையும் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். இந்நிலையில் அவருக்கு தூக்க மாத்திரையை கொடுத்தேன். அவர் தூங்கியதும் தரதரவென்று இழுத்து சென்று தீவைத்து எரித்துவிட்டேன்,” என்று குறிப்பிட்டு உள்ளார்.

தந்தையைப் போலவே தனது சகோதரனும் அந்தப் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் ஆயிஷா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அந்த இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கராச்சியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்து வடகொரியா அடாவடி…!!
Next post தொப்புள்கொடியுடன் குப்பைத்தொட்டியில் கிடந்த அனாதை குழந்தையை காப்பாற்றிய தெருநாய்…!!