பாரிமுனையில் 8 மாத ஆண் குழந்தை கடத்தல்…!!
பாரிமுனை, பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் பகுதியில் சாலையோரத்தில் வசித்து வருபவர் விமல். இவரது மனைவி மேத்தா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
8 மாத ஆண்குழந்தை ரோகேஷ். நேற்று இரவு விமல் குடும்பத்துடன் தூங்கினார். அதிகாலை 4 மணிஅளவில் மேத்தா எழுந்து பார்த்த போது அருகில் இருந்த குழந்தை ரோகேசை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இது குறித்து எஸ்பிளனேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த மாதம் வால்டாக்ஸ் சாலையில் இதே போல் பெருமாள்–லட்சுமி தம்பதியின் 6 மாத பெண் குழந்தை சரண்யா கடத்தப்பட்டது. இதுவரை குழந்தை மீட்கப்படவில்லை. தற்போது மீண்டும் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாலையோரத்தில் வசிப்பவர்களை குறி வைத்து குழந்தை கடத்தலில் மர்ம கும்பல் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த 2 குழந்தை கடத்தலிலும் ஒரே கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக நள்ளிரவில் அப்பகுதியில் சுற்றிய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக கடத்தப்பட்ட குழந்தையின் பெற்றோர் விமல்–மேத்தா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.
இந்த தகராறில் குழந்தை கடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று அவர்களிடமும் விசாரணை நடக்கிறது.
Average Rating