வட்டுக்கோட்டையில் ஆயுதபாணிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு பிள்ளையின் தந்தையார் உயிரிழந்துள்ளார்
Read Time:49 Second
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் நேற்றுமாலை 5.30க்கு ஆயுதபாணிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் முத்துக்குமார் சிவபாலன் வயது 30 என்ற ஒரு பிள்ளையின் தந்தையார் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த இவர் நேற்றுமாலை 6.00மணியளவில் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார். இவர் 2002ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் ஐ.தே கட்சி சார்பில் யாழில் போட்டியிட்ட வேட்பாளராவார்.